மண் மானம் கப்பல் ஏறிவிடாமல் தடுக்க, தன்மானத்துடன் கப்பலோட்டிய தமிழன்! இனமானம் காக்க வேண்டி தன் வருமானம் அனைத்தையும் இழந்த வள்ளல். செக்கிழுத்தச் செம்மல் நம்முடைய தாத்தா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கார்த்திகை 02ஆம் நாள் (18-11-2025) காலை 10 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணல் காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தா வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
முகப்பு தலைமைச் செய்திகள்



