க.எண்: 2025050489
நாள்: 09.05.2025
அறிவிப்பு:
மே 18 இனப்படுகொலை நாளையொட்டி, தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தாயகத்தில் குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் உயிரீகத்தையும், தாய் நிலத்தில் கொன்றொழிக்கப்பட்ட நம் தமிழீழச்சொந்தங்களின் நினைவையும் ஏந்தி, நம் மக்கள் உயிர் காக்க; நம் குருதியையே கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என்ற நோக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், குருதிக்கொடைப் பாசறை சார்பாக ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் குருதிக்கொடை முகாம்கள் நடத்திவருகின்றது.
அதேபோன்று இவ்வாண்டும், குருதிக்கொடைப் பாசறையினர் வருகின்ற மே 11 முதல் அனைத்து மண்டலங்களிலும் குருதிக்கொடை முகாம்கள் அமைத்தல், மே 18 அன்று மாலை 04 மணிக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கோவை கொடிசியா திடலில் நடைபெறவிருக்கும் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திலும் மாபெரும் குருதிக்கொடை முகாம் அமைத்தல் மற்றும் உறவுகள் அனைவருக்கும் உப்பில்லா கஞ்சி வழங்கல் பணிகளையும் முன்னெடுக்கவிருக்கின்றனர்.
இந்நிகழ்வுகளில் குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்களுக்கு, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு:
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
அரிமா மு.ப.செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் (+91-76674 12345)
ஈகை மணி, மாநில இணைச்செயலாளர் (8122540511)
சாமிநாதன், பாசறை அலுவலக மேலாளர் (8925531100)
ராஜேஷ் இளவரசன், மாநிலச் செய்தித் தொடர்பாளர் (9789277614)
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி