அறிவிப்பு: செப்.26, தியாகத்தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம்

366

அறிவிப்பு: செப்.26, தியாகத்தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவர், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளர். தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளான 26-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை சரியாக 9 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. நிகழ்வையொட்டி குருதிக்கொடை பாசறை சார்பாக அமைக்கப்படவிருக்கும் குருதிக்கொடை முகாமில் நாம் தமிழர் உறவுகள் பெருமளவில் பங்கெடுத்து குருதிக்கொடையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஆறாம் நிலம் – ஒரு பேரினத்தின் வலி! –
அடுத்த செய்திபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! அசாம் அரசப்பயங்கரவாதச்செயல்பாடுகளுக்கு சீமான் கண்டனம்