சுற்றறிக்கை:  ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக (மாவட்டவாரியாக கலந்தாய்வுக் கூட்டம்)

377

க.எண்: 2021090196

நாள்: 01.09.2021

சுற்றறிக்கை ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக (மாவட்டவாரியாக கலந்தாய்வுக் கூட்டம்)

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி தலைவர்-செயலாளர்களுடன், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

நாள் கலந்தாய்க்கான மாவட்டங்கள்
03.09.2021
வெள்ளிக்கிழமை
காலை 10 மணியளவில்
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகள்
04.09.2021
சனிக்கிழமை
காலை 10 மணியளவில்
இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகள்
05.09.2021
ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணியளவில்
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகள்

கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் கலந்தாய்க்கான மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட மற்றும் தொகுதி தலைவர்-செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நா.சந்திரசேகரன்

 பொதுச்செயலாளர்

முந்தைய செய்திபாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம் – பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு