க.எண்: 2021090196
நாள்: 01.09.2021
சுற்றறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக (மாவட்டவாரியாக கலந்தாய்வுக் கூட்டம்)
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி தலைவர்-செயலாளர்களுடன், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
நாள் | கலந்தாய்க்கான மாவட்டங்கள் |
03.09.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் |
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகள் |
04.09.2021 சனிக்கிழமை காலை 10 மணியளவில் |
இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகள் |
05.09.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் |
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகள் |
கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் கலந்தாய்க்கான மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட மற்றும் தொகுதி தலைவர்-செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்