முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலையொட்டி பொதுக்குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது

60

க.எண்: 2019120340

நாள்: 03.12.2019

முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலையொட்டி பொதுக்குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது

வருகின்ற 14-12-2019 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பி.எல்.பி பேலஸ் (PLP Palace Wedding Hall) திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதையொட்டி தள்ளிவைக்கப்படுகிறது. மேலும், பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்டும்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தல் களப்பணிகளில் முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்துக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்