சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு சுற்றுப்பயண அட்டவணை

60

க.எண்: 2019100168

நாள்: 29.10.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு சுற்றுப்பயண அட்டவணை | நாம் தமிழர் கட்சி

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவந்தநிலையில் இடைத்தேர்தலையொட்டி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் மாவட்டவாரியாக கலந்தாய்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

கலந்தாய்வு நடைபெறும் நாள் கலந்தாய்வுக்கான மாவட்டம்
காலை மாலை
0411-2019 திங்கட்கிழமை சென்னை
(சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு தொகுதிகள் மட்டும்)
05-11-2019 செவ்வாய்க்கிழமை ஈரோடு திருப்பூர்
06-11-2019 புதன்கிழமை நீலகிரி கோவை
09-11-2019 சனிக்கிழமை வேலூர்
10-11-2019 ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி தர்மபுரி
11-11-2019 திங்கட்கிழமை சேலம் நாமக்கல்
15-11-2019 வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி தூத்துக்குடி
16-11-2019 சனிக்கிழமை திருநெல்வேலி
20-11-2019 புதன்கிழமை தஞ்சாவூர் புதுக்கோட்டை
21-11-2019 வியாழக்கிழமை திருவாரூர் நாகப்பட்டினம்
22-11-2019 வெள்ளிக்கிழமை திருச்சி கரூர், பெரம்பலூர்
23-11-2019 சனிக்கிழமை திருவண்ணாமலை

மேலே உள்ள அட்டவணைப்படி மாவட்டக் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

குறிப்பு: மாவட்டக் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் தனித்தனி சுற்றறிக்கை மூலம் விரைவில் அறிவிக்கப்படும்.

முந்தைய செய்திஅறிவிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 56ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு