சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு சென்னை மாவட்டம் (முதற்கட்டம்)

32

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு
சென்னை மாவட்டம் (முதற்கட்டம்) | க.எண்: 2019060093 | நாள்: 24.06.2019

கடந்த 22-06-2019 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கின்றன.

கலந்தாய்வு நாள் பங்கேற்கும் தொகுதிகள்
25-06-2019 செவ்வாய்க்கிழமை
காலை 11 மணியளவில்
திரு.வி.க.நகர். மற்றும் கொளத்தூர்
26-06-2019 புதன்கிழமை
காலை 11 மணியளவில்
இராயபுரம் மற்றும் சேப்பாக்கம்
27-06-2019 வியாழக்கிழமை
காலை 11 மணியளவில்
துறைமுகம் மற்றும் வேளச்சேரி

இதில் உட்கட்சிக் கட்டமைப்பை மறுசீராய்வு செய்வது குறித்தும், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

எனவே மேலே உள்ள அட்டவணைப்படி குறிப்பிட்ட கலந்தாய்வு நாளில் பங்கேற்க வேண்டிய தொகுதிகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி