சுற்றறிக்கை: மறுவாக்குப்பதிவு நடத்தப்படவிருக்கும் 13 வாக்குச்சாவடிகள் விவரம் – தேர்தல் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு

54

சுற்றறிக்கை: *மறுவாக்குப்பதிவு நடத்தப்படவிருக்கும் 13 வாக்குச்சாவடிகள் விவரம் – தேர்தல் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு* | நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவிருக்கும் 13 வாக்குச்சாவடிகள் விவரம்:
1. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உள்ள 248-வது வாக்குச்சாவடி
2. தேனி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் உள்ள 67-வது வாக்குச்சாவடி
3. தேனி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகப்பட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் உள்ள 197-வது வாக்குச்சாவடி
4. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உள்ள 195-ம் வாக்குச்சாவடி
5. கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட (பண்ருட்டி) திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உள்ள 210-வது வாக்குச்சாவடி.
6-13. தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 181 மற்றும் 182-ம் வாக்குச்சாவடிகள். நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 192, 193, 194 மற்றும் 195 ஆகிய வாக்குச்சாவடிகள். ஜல்லிப்புதூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 196 மற்றும் 197-ம் வாக்குச்சாவடிகள் ஆகிய 8 வாக்குச்சாவடிகள்.
மொத்தமாக 13 வாக்குச்சாவடிகளில் வருகின்ற மே-19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால் ஈரோடு, தேனி(ஆண்டிப்பட்டி, பெரியகுளம்), திருவள்ளூர்(பூந்தமல்லி), கடலூர் (பண்ருட்டி), தர்மபுரி(பாப்பிரெட்டிப்பட்டி) ஆகிய நாடாளுமன்ற/சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தத்தம் தொகுதிகளில் கலந்தாய்வு நடத்தி உரிய களப்பணிகளை விழிப்புடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான்  பரப்புரை | முரசொலி தலையங்கம்..! – சீமான் பதிலடி
அடுத்த செய்திஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 அரவக்குறிச்சி)