அறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)

29

அறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 16-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

இறுதி நாளான இன்று *16-05-2019* வியாழக்கிழமை, மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இரா.ரேவதி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் முன்னணி பேச்சாளர்கள் ஒன்றுதிரளும் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் அய்யனார்புரத்தில், வேலம்மாள் மருத்துவமனை அருகில் நடைபெறவிருக்கிறது.

இப்பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு: https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்!- சீமான் சூளுரை