‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் 113ஆம் ஆண்டு பிறந்தநாள்: சீமான் மலர்வணக்கம்

153

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் அவர்களின் 113ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 27-09-2017 புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பா. ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு தென்னரசன், கதிர் இராஜேந்திரன், ஆன்றோர் அவையம் புலவர் மறத்தமிழ்வேந்தன், கொள்கைப்பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன், காஞ்சிபுரம் சஞ்சீவிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று புகழ்வணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திதிண்டுக்கல் வேடபட்டியில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு (28-09-2017)