அறிவிப்பு: பெருந்தலைவர் காமராசர் 42ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (கொளத்தூர்)

419

காமராசர் 42ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (கொளத்தூர்) | நாம் தமிழர் கட்சி

‘பெருந்தலைவர்’ ஐயா காமராசர் அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (02-10-2017) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், வழக்கறிஞர், உழவர், குருதிக்கொடை, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 02-10-2017 திங்கட்கிழமை காலை 10 மணி
இடம்: பெரவள்ளூர், கொளத்தூர், சென்னை
தொடர்புக்கு: +91-9994055788


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருவில்லிபுத்தூர்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு: கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி