அறிவிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் – சாலிக்கிராமம் | நாம் தமிழர் கட்சி https://goo.gl/YZDAKo
காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின் முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் 16-09-2017 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு, சென்னை, சாலிக்கிராமம், தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ளது.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுரையாற்றுகிறார்.
அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாள்: 16-09-2017 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணி
இடம்: தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில், அருணாச்சலம் சாலை, சாலிகிராமம், சென்னை
தொடர்புக்கு: +91-9444542144 / 9003193815
https://goo.gl/YZDAKo
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084