அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் பரப்புரைத் திட்டம்

70

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து எட்டு நாட்களாக நடைபெற்றுவருகிறது.

ஒன்பதாவது நாளான 09-12-2017 (சனிக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 08:30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
இடம்: 40வது வட்டம், சிவகாமி நகர், மங்கம்மாள் தோட்டம், சுணாமி குடியிருப்பு, சிவன் நகர், ஜீவா நகர், பர்மா நகர். தொடங்குமிடம்: குறுக்கு சாலை (Cross Road), பூங்கா

நேரம்: பிற்பகல் 02:30 மணி முதல் மாலை 5 மணி வரை வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
இடம்: 40வது வட்டம், கீரை தோட்டம், அம்மனியம்மாள் தோட்டம், திருவள்ளுவர் குடியிருப்பு, வ.உ.சி நகர். தொடங்குமிடம்: அப்பல்லோ மருத்துவமனை பின்புறம்

நேரம்: மாலை 06 மணிக்கு தெருமுனைக்கூட்டம்
இடம்: 0வது வட்டம், வ.உ.சி நகர் கடை வீதி
தொடர்புக்கு: 9444125013 / 8248078484

திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பரப்புரைப் பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஆர்.கே நகர் தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: டிச-10 முதல் சீமான் தலைமையில் வாக்கு சேகரிப்பு