மாட்டுக்கறியா? மதவெறியா? : மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

35

மாட்டுக்கறியா? மதவெறியா? : மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்பதற்கு தடை விதித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில், வருகின்ற 05-06-2017 திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் சீமான் கண்டனவுரையாற்றுகிறார்.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி. வட்ட, பகுதி, கிளை, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர்கள் பாசறை, மருத்துவர்கள் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் உடலுக்கு சீமான் இறுதி மரியாதை
அடுத்த செய்திஓ.என்.ஜி.சி குழாய்ப்பதிப்புக்கு எதிராகப் போராடியோர் கைது: மக்கள் புரட்சி வெடிக்கும் – சீமான் எச்சரிக்கை!