தஞ்சாவுர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் தேர்தல் பணி குறித்து அவசர கூட்டம் பாப்பநாட்டில் நடைபெற்றது .கூட்டத்திற்கு ஆசிரியர் வெ.ராஜேந்திரன் தலைமை வகித்தார் .கூட்டம் குறித்து பாபாநாடு இரா. காமராசு பேசினார் வருகின்ற தமிழ்நாடு ஆட்சி மன்ற தேர்தலில் நமது பங்கு, நாம் எப்படி பணி ஆற்றுவது குறித்து விரிவாக தஞ்சை தெற்கு மாவாட்ட அமைப்பாளர் பட்டுக்கோட்டை பழ.சக்திவேல் பேசினார். கூட்டத்தில் வருகின்ற 19 .03 .2011 அன்று துவரங்ககுறிச்சியில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளிக்காதே தேர்தல் பரப்புரை துவக்குவது.
மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவராக பழ.சக்திவேல், பொறுப்பாளர்களாக பாபாநாடு இரா.காமராசு, மு லெனின், வெ .ராஜேந்திரன், மு.செக்கநாதன், க.ரமேசு, அணைக்காடு தேவராஜன், புலவஞ்சி பிரபாகரன், ஐயப்பன், பாலா, கார்த்திக், மைனர், ஏனாதி தா. ரெங்கநாதன், கன்னக்குடி செயசங்கர், பட்டுக்கோட்டை சண்முகம், அணைக்காடுகிளமன்ட் வாடியக்கடு மணிகண்டன், உறநிபுரம் மணிகண்டன், செருவவிடுதி சரவணன், திருச்சிற்றம்பலம் பாலசந்தர், அதிரை துரை சன்முகம்,பட்டிகாடுமுருகானந்தம், உறநிபுரம் முருகானந்தம், கல்லுரி மாணவர் மணிகண்டன் இரா.மதியழகன், போதிராஜ வ.மணிமாறன், சு.மகராஜா, செந்தில்கநேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.