குவைத் செந்தமிழர் பாசறை உறவுகளின் ஒன்றுகூடல் கடந்த 13.11.2020 அன்று காலை ஜாப்ரியா பூங்காவிலும், மாலை பாகில் கடற்கரையிலும் சிறப்பாக நடைபெற்றது.
2021 தேர்தலில் குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையும், தாயக தேர்தல் களத்தில் நமது குடும்ப உறவுகளின் வாக்குகளை நாம் தமிழர் வாக்காக உறுதிபடுத்துவது குறித்தும் கலந்தாய்வில் விவாதிக்கப்பட்டது.
கிழக்கு மற்றும் தெற்கு மண்டலப் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடலை ஒருங்கிணைத்தனர். இதில் செந்தமிழர் பாசறையின் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இலக்கு ஒன்றுதான்!
இனத்தின் விடுதலை!