கனகராயன் குளத்தில் வாக்குச்சாவடியில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்! – பதட்டத்தில் நடந்த தற்செயலான சம்பவம் என பொலிசார் தெிவிப்பு

8

வட மாகாண சபைக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல் கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன் குளம் சின்னரம்பன் பாரதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார் இதனால் அங்கு வாக்களிப்பதற்கு வருகைதந்திருந்த 24 வயதான நா.தவராசா காயமடைந்துள்ளார். துப்பாக்கி சன்னம் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பட்டே அவரது காலில் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது பதட்டத்தில் நடந்த தற்செயலான சம்பவம் என பொலிசார் கூறியுள்ளனர்.

முந்தைய செய்திஅனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததார் என யாழில் உதயன் பத்திரிகை அச்சிட்டு இராணுவம் வினியோகம்!
அடுத்த செய்தி2 ஆம் இணைப்பு தமிழர் தேசம் சிங்களத்துக்கு வன்னி மண்ணில் கொடுத்த முதலடி! முதலிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!