திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

437

தந்தை. பெரியார் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள மங்களாபுரம் சமத்துவபுரத்தில் தந்தை. பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலை, இலக்கிய பண்பாட்டு பாசறையின் ஒருங்கினைப்பாளர் திரு. பசும்பொன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடையநல்லூர் நகர ஒருங்கினைப்பாளர்; பழக்கடை கணேசன், முனியசாமி, சிலம்புக்கலை துரைப்பாண்டியன், சுரேஷ் குமார். கடையநல்லூர் ஒன்றிய பொய்கை சசிக்குமார், ஊர்மேணி அழகியான், வெங்கடகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், பண்பொலி கணேசன். சங்கரன் கோவில் ஒன்றிய ஒருங்கினைப்பாளர்; ஆ.கோ.தங்கவேல். வீரிருப்பு; முருகதாசன், வாசுதேவநல்லூர் ஒன்றியம்; கூடலூர் ராஜா, உட்பட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திசர்வதேச தேர்தல் கண்கானிப்பாளர்கள் இருவர் மன்னார் பயணம்!
அடுத்த செய்திசண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் நாட்டைவிட்டு வெளியேறினார்!