தமிழ்த் தேசிய அரசியல் களத்தில், சமரசம் இன்றி சளைக்காமல் சமர் செய்யும் சமரன்..!
ஓராயிரம் தடைகளும், அடக்கிப் போடும் சிறைகளும், மிரட்டிக் காட்டும் அச்சுறுத்தல்களும் சுற்றி வந்து சூழ்ந்தாலும் தயக்கமே இல்லாமல் தடைகளை உடைக்க வீறு கொண்டு எழும் வீரன்..!
அறிவார்ந்த மொழியினால், அளவற்ற துணிவினால் எப்போதும் என் தோளுக்குத் துணையாக நின்று வலிமை சேர்க்கும் இளையன்..!
இனமானக் களத்தில் அநீதிக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றி கொள்கைப் பேசும் புலிக்கொடி சீலன்..!
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்.
அன்பு இளவல் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
@Saattaidurai




