நாம் தமிழர் கட்சி – பேராவூரணி கட்சி மாவட்டப் பொருளாளர் சத்திரப்பட்டி செ.முருகானந்தம் அவர்களின் தாயார் அம்மா செ.தனம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும் செ.முருகானந்தம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செ.தனம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



