உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளினை (01-11-1956) தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இவ்வாண்டு, ஐப்பசி 15 (01-11-2024) அன்று மாலை 05 மணியளவில் சென்னை பெரம்பூரில் பழநி ஆண்டவர் கோயில் தெருவில் பேரெழுச்சியாக நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டத்தில் தமிழ்த்தாயை வணங்கி, தமிழ்நாட்டுக் கொடிப்பாடல் இசைக்க தமிழ்நாட்டுக் கொடியேற்றி, எல்லை மீட்புப் போராளிகளுக்குப் புகழ் வணக்கம் செலுத்தியபோது,
https://t.co/1zDloHjkv6
#தமிழ்நாடுநாள்_2024







