நாம் தமிழர் கட்சி – சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, மாம்பலத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி சுரேஷ்குமார் வடிவேல் அவர்களின் மூத்த சகோதரர் வ.செந்தில்குமார் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்பிற்குரிய அண்ணனை இழந்து வாடும் தம்பி சுரேஷ்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி வ.செந்தில்குமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




