அசல் மனிதர்களின் வாழ்வியலை திரைமொழியில் மிகையில்லாது காட்சிப்படுத்தி, உயிரோட்டமானப் பாத்திரங்களைப் படைத்து, மாந்த உணர்வுகளை வலிமையாகக் கடத்தி, காலங்கடந்து நிற்கும் மகத்தானப் படைப்புகளைத் தரும் மாபெரும் படைப்பாளி!
அப்பா பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்று, நடிப்பு, திரைமொழி எல்லாவற்றுக்குமானப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் தன்னிகரற்ற கலை ஆளுமை!
தனது திரைப்படங்களின் மூலம் அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தலைசிறந்த படைப்புகளின் மூலம் தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச் செய்யும் பெருமைக்குரிய திரைக்கலைஞர்!
தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் பெருமித அடையாளங்களை ஏற்று, தாய் நிலத்தின் மீது பற்றோடும், தமிழ்த்தேசிய இன உணர்வோடும் திகழும் மண்ணின் மகன்!
தமிழ்த்திரையுலகின் பெருமிதத்திற்குரிய கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது ஆருயிர் இளவல் பாலா அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.




