நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி வழக்கறிஞர் முரளி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த தம்பி முரளி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பி முரளி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி முரளி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




