நாம் தமிழர் கட்சி – கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பொறுப்பாளர் அன்புத்தம்பி ரமேஷ் (எ) கண்ணாமணி அவர்களின் தந்தை ஐயா பன்னீர் செல்வம் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா பன்னீர் செல்வம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




