நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் மாவட்டம், உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி க.அரிபிரசாத் அவர்களின் மாமியார் அம்மா ஞா.விமலா அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் சகோதரிக்கும், தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ஞா.விமலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




