இராமநாதபுரம் மாவட்டம், மூலக்கொத்தளம், எச்.பி. காலனியைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை கலை இலக்கிய பண்பாட்டு பாசறை தலைவருமான அன்புத்தம்பி கா. பெருமாள் அவர்களின் தந்தை வே.காளிமுத்தன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி கா.பெருமாள் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா வே.காளிமுத்தன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!




