நாம் தமிழர் கட்சி – திருவாரூர் நன்னிலம் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி மு.கலையரசன் அவர்களின் தந்தையும் திருவோணமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா முருகையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முருகையன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




