நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர், ஆவடி மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ச.செல்வமணி அவர்களின் தாயார் அம்மா ச.தைனேஸ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆரூயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ச.தைனேஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




