தம்முடைய அபார நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து மக்களை மகிழ்விக்கும் தமிழ்த்திரையுலகின் முன்னணி திரைக்கலைஞர்!
அரசே மதுவினை விற்று தமிழ்ப் பிள்ளைகளைக் குடிக்கவைத்துச் சீரழித்துவரும் கொடுமையான காலக்கட்டத்தில், தனி ஒரு மனிதனாக அகரம் கல்வி அறக்கட்டளை மூலமாக, கல்வி கற்க வசதியற்ற ஏழ்மை நிலையிலுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து உயர்கல்விவரை படிக்க வைக்கும் பெரும்பணி புரியும் ஆருயிர் இளவல் சூர்யா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
அப்பா சிவக்குமார் தொடங்கிய அறப்பணியை இரண்டாம் தலைமுறையாக தொய்வில்லாமல் தொடர்ந்து, நல்லதொரு தலைமுறையை நாட்டிற்கு உருவாக்கித் தருகின்ற போற்றுதற்குரிய பொதுத்தொண்டு புரியும் ஆருயிர் இளவல் சூர்யா அவர்கள், நல்ல உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் இன்னும் பற்பல ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து, அரும்பணிகள் யாவும் தொடர்ந்து சிறப்புற ஆற்றிட வாழ்த்துகிறேன்!
@Suriya_offl




