நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி, மூரார்பாளையத்தைச் சார்ந்த, சவூதி செந்தமிழர் பாசறையின் தமாம் மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி காசிவேல் அவர்களின் அன்புமகள் தணிகா ஸ்ரீ அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்பு மகளை இழந்து வாடும் தம்பி காசிவேல் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
அன்புமகள் தணிகா ஸ்ரீ அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




