தமிழ்த்தேச விடுதலைக்காகத் தனது வாழ்நாள் முழுமைக்கும் போராடி, அரும்பெரும் ஈகங்களைச் செய்திட்ட மகத்தான தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் மருமகள்!
இனத்தின் விடுதலைக்கானப் பெரும் பணியில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டு, நாம் தமிழர் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்து களத்தில் நிற்கும் முன்களச் செயற்பாட்டாளர்!
அறிவாற்றலாலும், நெஞ்சுரமும் கொண்டு, இனமானப் பணியாற்றி வரும் பெருமகள்! ஆற்றல்மிகு செயல்வீரர்!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய அம்மா அமுதா நம்பி அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!




