நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வீ.பார்த்திபன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா க.வீரராகவன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் க.வீரராகவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




