முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – செய்யாறு தொகுதி, கொருக்காத்தூர் கிராமத்தைச்…

0

நாம் தமிழர் கட்சி – செய்யாறு தொகுதி, கொருக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி தி.பாண்டியன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா கோ.திருநாவுக்கரசு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பாசமிகு தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி பாண்டியன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கோ.திருநாவுக்கரசு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version