நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் நத்தம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பொறியாளர் அன்புத்தம்பி ஆ.மதிவாணன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரியஐயா ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி ஆ.மதிவாணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ஆறுமுகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




