நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 79ஆவது வட்டத்தைச் சேர்ந்த மூத்த பொறுப்பாளர் ஐயா இசையேந்தி அவர்களின் அன்புத்தம்பி பாலமுரளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு உடன்பிறந்த தம்பியை இழந்து வாடும் ஐயா இசையேந்தி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி பாலமுரளி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




