நாம் தமிழர் கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிச்செயலாளர் அன்புத்தம்பி பீர் ரகுமான் அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, மதிப்பிற்குரிய ஐயா சுல்தான் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி பீர் ரகுமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தந்தை சுல்தான் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




