நாம் தமிழர் கட்சியின் வேளச்சேரி தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி கு.இராமநாதன் அவர்களின் தாயார் அம்மா கு.ரோகினி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த பாசமிகு அன்னையை இழந்து வாடும் தம்பி இராமநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ரோகினி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




