திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்களது இல்லத்திற்கு இன்று (26-01-2024) நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளித்தேன்.
இன்றுவரை கொலையாளிகளைக் கைது செய்யாமல் நாம் தமிழர் கட்சியினர் மீது அடக்குமுறைகளை ஏவி வரும் திமுக அரசைக் கண்டித்து இன்று 26-01-2024 நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகக் கூடுவோம்.







