போலந்து நாட்டிற்குப் பணிபுரிய சென்ற சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், பஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ஐயா வீரபாண்டி – செல்லம்மாள் இணையரின் மகன் சதிஷ்குமார் அவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். @CMOTamilnadu @mkstalin

அன்பு மகனை இழந்து துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.(3/3)
தமிழ்நாடு அரசு, போலந்து நாட்டிலிருந்து தம்பி சதிஷ்குமாரின் உடலை
உடனடியாக தாயகம் கொண்டுவந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உரிய விசாரணை நடத்தவும் இந்தியத் தூதரகத்தின் வழியே போலந்து அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.



