முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…

1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா நன்மாறன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கட்சியினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

மக்கள் நலனும், எளிமைப்பண்பும் தனது இரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து மறைந்த ஐயாவின் இழப்பு ஈடுசெய்ய இயலாப் பேரிழப்பாகும்.

ஐயா நன்மாறன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

கருத்துச்செறிவோடு நகைச்சுவையுணர்வும் மிகுந்து, எளிய மொழி நடையில் மக்களிடம் கருத்துகளை முன்வைத்து, 'மேடைக்கலைவாணர்' என எல்லோராலும் போற்றப்பட்டவர் ஐயா நன்மாறனாவார். அவரோடு பல மேடைகளில் ஒன்றாகப் பங்கேற்று, பேசிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். (2/3)

Exit mobile version