கொரொனா தொற்று மீண்டும் தீவிரமடைந்திருக்கும் இந்நேரத்தில் உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியமானது. முகக்கவசம், கையுறை பயன்படுத்துவதோடு, தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்குமாறும், நோய்எதிர்ப்பு ஆற்றலுக்காக கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

தற்பொழுது கடும் வெயிற்காலமாக இருப்பதால் அனைவரும் மிகக் கவனமாகவும், வீட்டிலுள்ள முதியோர்களை அதீத கவனம் கொண்டு பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது போல பிற உயிரினங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும், ஆதலால் உறவுகள் அனைவரும் தங்கள் வீடுகளின் முகப்பில் அல்லது மாடியில் பறவைகளுக்கும், பிற சிற்றுயிர்களுக்கும் தண்ணீர்த்தொட்டி அமைத்து உயிர்நேயம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்



