அறிக்கைகள்

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான்...

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த, ஆபத்தான திறந்தவெளி...

உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்துள்ள...

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சத்தீவை மீட்பது...

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் 05-08-2025 அன்று கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த...

நா.த.க.வின் உயிர்மநேய அரசியலை பாராட்டியுள்ள இயற்கை ஆர்வலர் என் ஆருயிர் இளவல் வி.ப.ஜெயபிரதீப் அவர்களுக்கு சீமான் நெஞ்சம் நிறைந்த...

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய தத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் அனைத்து உயிர்களுக்குமான உயிர்மநேய அரசியலின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களும், ஆடு-மாடுகளும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் உயிர்...

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்! – சீமான் உறுதி

அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச்...

சத்தீஸ்கரில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள அருட்சகோதரிகள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான்...

சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களுக்குச் சேவை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரிகள் மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவரையும் பொய் வழக்கு புனைந்து அம்மாநில பாஜக அரசு கைது செய்துள்ளது வன்மையான...

தமிழ்நாடு அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் ஊர்க்காவல்...

சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!...

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின்...

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்துதர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் கடலரிப்பால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அப்பகுதி மக்கள் தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. கடலரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்காமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் அலட்சியப்போக்கு...

அறந்தாங்கியைச் சேர்ந்த தங்கை பர்வீன்பானுவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு கடந்த 14.07.2025 அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றவர், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள துயர நிகழ்வு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...
Exit mobile version