சேலம் அண்ணல் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான டேக்வாண்டா தற்காப்புக் கலை போட்டிகளில் ஈரோடு மாவட்டம் சார்பாக பங்கேற்ற மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள செய்தியறிந்து மகிழ்ந்தேன். இதில், நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலக ஊடகப்பிரிவைச் சேர்ந்த அன்புத்தம்பி சுரேஷ்குமார் வடிவேல் அவர்களின் அன்புமகன் மனு முகில் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
அன்புமகன் மனு முகில் அவர்கள் தனது தனித்திறனை வளர்த்துக்கொண்டு மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, உலக அளவில் சாதனைகள் படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!




