நாம் தமிழர் கட்சி – பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சு.ந.ஆறுமுகம் அவர்களின் தாயார் அம்மா ந.ஜானகி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ந.ஜானகி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




