வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான அன்புத்தம்பி இரா.சுந்தரவந்தியத்தேவன் அவர்களின் தாயார் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அம்மா இரா.ரஞ்சிதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி சுந்தரவந்தியத்தேவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ரஞ்சிதம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




