முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உயிர் நிகர் தாய்த்தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த மொழிப்போர்…

0

உயிர் நிகர் தாய்த்தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த மொழிப்போர் மறவர்களது பேரீகப் பெரும்புகழ் போற்றுவோம்!

மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது தலைமுறைகள் வாழ்வதற்கு மூதாதைகள் விட்டுச் செல்கிற பண்பாட்டு மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம். மொழி என்பது மனிதப் பரிணாமத்தின் மாபெரும் பாய்ச்சல்.

மொழி என்பது ஒரு மனிதனின் உயிரையும் உடலையும் ஒலி வழியாக இணைக்கும் உருவமற்ற ஒழுங்கின் வடிவம்! பல்லாண்டு காலமாக நம் மூதாதையர் தம் எண்ணங்களையும், கருத்துக்களையும் கடத்த தொடர்ச்சியாக பயன்படுத்தும் வரையறுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஒலி குறிப்புகளின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பு மொழியாகும். மொழி என்பது வெறும் மொழி குறிப்புகளாக மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு உள்ளிட்ட மக்களின் வாழ்வியலை தன்னகத்தே சேமித்து வைத்துள்ள கொள்கலன் ஆகும். ஒரு மொழி எத்தனை பழமையானதோ அந்த இனமும் அத்தனை பழமையானது! அதன் வரலாறும், பண்பாடும், கலை, இலக்கியமும் அத்தனை பழமையானது; செம்மையானது!
உலகின் மிகப் பழமையான மூத்த முதல் மொழியும், உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியுமான,
அன்னைத் தமிழின் பிள்ளைகளான நாம்தான் உலகின் மூத்த தொல்குடி மக்களாவர்.

மொழியை உலகிலுள்ள உயிர்களில் மனிதர்களுக்கு மட்டுமேயான அமுதச்சுரபி என்கிறார்கள். தேசப்பரப்பை வரையறுக்கிறபோது நிலப்பரப்பை வைத்தோ, மதங்களை வைத்தோ வரையறுப்பதில்லை. மொழியை வைத்துத்தான் தேசங்களும், தேசிய இனங்களும் வரையறை செய்யப்படுகின்றது. தமிழர் என்ற தேசிய இனத்தின் முகமாக, முகவரியாக விளங்குவது நம் தாய்மொழி தமிழேயாகும். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாடினார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். உயிருக்கு நிகரான தமிழ்மொழிக்கு இந்தி மொழித்திணிப்பினால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக பல நூற்றுக்கணக்கான வீரமறவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தாய்மொழி காக்கத் துணிந்தனர். ‘செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபம் உண்டோ?’ எனப் பாடிய புரட்சிப்பாவலர் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப ஏப்ரல் 21, 1934 அன்று ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க அரசாணை வெளியிட்டபோது தமிழர்கள் கொதித்தெழுந்து தமிழ்மொழி காக்க, தன்னுயுயிரைத் தாரைவார்க்க வீதிகளில் திரண்டனர்.

சென்னையில் மொழிப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கு சென்ற ஐயா நடராசன் அவர்கள் தன் உடல்நலம் குன்றியபோதும் போராட்டத்தில் இருந்து பின்வாங்காது சாவுக்குத் துணிந்து நின்றார். மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்வதாக அரசு அறிவித்தும் கூட மன்னிப்புக் கேட்க மறுத்து, சனவரி 15, 1939 அன்று சிறையிலேயே வீரச்சாவைத் தழுவினார். மொழிப்போராட்டக்களத்தில் ஐயா நடராசன் அவர்கள் செய்த உயிரீகம் இலட்சக்கணக்கான தமிழர்களைத் தட்டியெழுப்பியது. அதன் தொடர்ச்சியாக, கும்பகோணத்தைச் சேர்ந்த ஐயா தாளமுத்துவும் சனவரி 13, 1939 அன்று சென்னை சிறையில் உயிர்நீத்தார். இவ்விரண்டு உயிரீகங்களால் போராட்டம் மேலும் தீவிரம் அடையவே இந்தியை பயிற்று மொழியாக்குவது தொடர்பான அரசாணையை அப்போதைய மதராஸ் மாநில அரசு பிப்ரவரி 21, 1940 அன்று திரும்பப்பெற்றது.
இந்திய துணைக்கண்டம் விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஐயா ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்து, மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால் அரசு பின்வாங்கியது. பாராளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக தொடரும் என அளித்த உறுதிமொழியால் போராட்டம் அப்போதைக்கு மௌனித்தது.

மீண்டும் 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்கின்ற ஆட்சிமொழி சட்ட மசோதாவால் மீண்டும் தமிழ்நாடு போராட்டக்களமானது. கீழப்பழுவூர் சின்னசாமி சனவரி 25, 1964 அன்று தமிழ் மொழி காக்க திருச்சி தொடர்வண்டி நிலையம் எதிரே தீக்குளித்து உயிரீகம் செய்தார். அவரது வரிசையில் பல தமிழர்கள் இன உணர்வினால் தன் தாய்மொழி காக்க தன்னுயிர் தந்து தமிழின வரலாற்றில் விதைகளாக மாறிப்போனார்கள். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி என தமிழ் மொழி காக்க தன்னுயிர் தந்த மொழி ஈகிகளின் பட்டியல் நீளுகிறது.

இவ்வாறு தன் தாய்மொழிக்காக தன் உயிரை இழக்கத் துணிந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லை என்கிற தனித்த வரலாற்றுப்பெருமை நம் இனத்திற்குண்டு. ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள் Ôஎங்கேயும் இல்லை தமிழ்Õ என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

தமிழ்நாடு அரசு என்ற பெயரை பேருந்துகள் முதல் மருத்துவமனை, கல்லூரி, பல்கலைக்கழகம் வரை வைக்கச் சொல்லி போராடும் நிலையே இன்றைக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது. நம்ம சிலீமீஸீஸீணீவீ, நம்ம ஷிநீலீஷீஷீறீ என்று ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலை இன்றுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் விரவிக் கிடக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை புகுத்தி தாய்மொழிக் கல்வியை சிதைத்துள்ளது திராவிட மாடல் அரசு. இந்தி ழிமீஸ்மீக்ஷீ, இங்கிலீஷ் ணிஸ்மீக்ஷீ என்றவர்கள் ஆட்சியில் எங்கு காணினும் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. மும்மொழி கொள்கை எப்படி மோசடி கொள்கையோ, அதைப்போலவே இருமொழி கொள்கையும் ஏமாற்று கொள்கையே ஆகும்.

(1/2)

Exit mobile version