க.எண்: 2026010031அ
நாள்: 21.01.2026
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருவாடானை சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 24-01-2026 மாலை 03 மணியளவில் திருவாடானை, உப்பூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வெங்கடேஷ் பாலா திருமண மகாலில் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில் திருவாடானை தொகுதியைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



