முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் – இலுப்பூரைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை…

0

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் – இலுப்பூரைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை அமீரகத்தின் சேவை மையப் பொறுப்பாளர் அன்புத்தம்பி கருணாகரன் அவர்களின் தாயாரும், செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத்தலைவர் அன்புத்தங்கை இராஜலெட்சுமி கருணாகரன் அவர்களின் மாமியாருமான அம்மா பிச்சம்மாள் அவர்கள் இன்று (22-12-2025) மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

ஆருயிர் தாயாரை இழந்து வாடும் தம்பி கருணாகரன் மற்றும் தங்கை இராஜலெட்சுமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா பிச்சம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version