தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை!

9

க.எண்: 2025110986
நாள்: 25.11.2025

அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தொகுதியைச் சேர்ந்த அ.பீட்டர் (03558182070), புவனகிரி தொகுதியைச் சேர்ந்த க.ஜனார்த்தனன் (11462846284) ஆகியோர் தங்களின் தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி